Friday, June 24, 2011
தமிழக மக்களும், ரசிகர்களும்தான் எனக்கு ஏணியாக இருந்து தாதா சாஹேப் விருது பெற வைத்தனர் என்று டைரக்டர் கே.பாலசந்தர் நெகிழ்ச்சியுடன் கூறினார். தாதா சாஹேப் பால்கே விருது பெறும் டைரக்டர் கே.பாலசந்தருக்கு பிரம்ம கான சபா சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமையில் நடைபெற்ற விழாவில் நடிகர்கள் கிரேஸி மோகன், இளவரசு உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.