
Monday, June 13, 2011

மலையாளத்தில் தயாரான பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரிமேக் ஆனது. மலையாளத்தில் நயன்தாராவும், தமிழில் அசினும் நாயகிகளாக நடித்தனர். இப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. வெங்கடேஷ், திரிஷா ஜோடியாக நடிக்கின்றனர்.
இதில் நடிப்பது குறித்து திரிஷா கூறியதாவது:-
பாடிகார்ட் படத்தின் கதை அற்புதமானது. உணர்வு பூர்வமான காதலை உள்ளடக்கியது. இதில் எனது கேரக்டர் ரொம்ப பிடித்துள்ளது. ரொம்ப ஈடுபாட்டோடு நடித்து வருகிறேன். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். கல்லூரி சீன்கள் முடிந்து விட்டது.
ஒரு வாரம் ஓய்வு கிடைத்ததால் சென்னை வந்துள்ளேன். நயன்தாரா, அசின் ஆகியோர் மலையாளம், தமிழில் ஏற்கனவே இப்படத்தில் நடித்துள்ளனர். இருவரில் யார் நடிப்பு உயர்வானது என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே சிறந்த நடிகைகள், ஆனால் நான் அவர்கள் நடிப்பை பின் பற்றமாட்டேன்.
தெலுங்கு பாடிகார்ட் படத்தில் எனது தனித்துவத்தை காட்டுவேன். எனது தந்தை கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பை விசாகபட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் நடத்த உள்ளோம். போதுமான படங்கள் கைவசம் உள்ளன.
புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. மங்காத்தா படத்தில் இன்னும் ஐந்து நாட்கள் நடிக்க வேண்டி உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு முடிந்து விடும்.
இவ்வாறு திரிஷா கூறினார்.