Wednesday, 3 August 2011
ரஜினி ரசிகர்கள் 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் !
மகனார் சிம்புவின் திரைப்படங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்காக தனி டி.வி. ஆரம்பிக்கிறார் டி.ஆர்.!
Tuesday, 2 August 2011
வடிவேலு தலைமறைவு போலீசார் தீவிர வேட்டை.
காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக வடிவேலுவையும் அவர் மனைவி விசாலாட்சியையும் விசாரிக்க முடிவு செய்த போலீஸ் அது தொடர்பான சம்மனை வழங்கச் சென்றபோது, வடிவேலு இல்லை.ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவரது உறவினர்கள், உதவியாளர்கள் யாரும் எதுவும் சொல்ல மறுக்கிறார்களாம்.வடிவேலுவின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. சிங்கமுத்துவிடம்... இதைத் தொடர்ந்து இந்த நிலத்தை வடிவேலுவுக்கு வாங்கிக் கொடுத்த சிங்கமுத்துவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரும் விசாரணைக்கு வர சம்மதித்துள்ளார். இதுகுறித்து சிங்கமுத்து கூறுகையில், "வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார். பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது," என்றார். இதற்கிடையே வடிவேலுவைத் தேடி அவரது மதுரை வீட்டுக்கும் போலீசார் விரைந்துள்ளனர். |
வைர நகைகள் அணிய பிடிக்கும் -காஜல் அகர்வால்...

இது குறித்து காஜல் கூறியதாவது:-
நகை கண்காட்சியில் நகைகளை அணிந்து நடந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதற்காக பயிற்சி எடுக்கவில்லை. சென்னையில் இருந்து வந்து இறங்கியதும் இதில் பங்கேற்றேன்.
நகைகளில் எனக்கு வைர நகைகளை பிடிக்கும். குறிப்பாக வைர மோதிரம் அணிய ரொம்ப ஆர்வம். எனக்கு வைர மோதிரம் ஒன்றை எனது தந்தை பரிசாக கொடுத்துள்ளார். அதை எப்போதும் அணிகிறேன்
இன்றைய யூத் ஐகான் நடிகர் யார் ? – சர்வே முடிவுகள் வெளியீடு.

கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே (ஜூலை 31) நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
கிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.
"பி" போட சொல்லி பிரச்சாரம் பண்ணும் நடிகர் விக்ரம்!
விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் அக்கா வேடத்தில் அனுயா!
இந்த நிலையில்தான் அவர் ஷங்கர் இயக்க விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பெரிய டைரக்டர், அதிக சம்பளம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் விஷயம் வெளியில் தெரிந்ததும், நிறைய பேர் இதேபோல அக்கா வேடங்களோடு வந்து கதவைத் தட்ட, அவர்களுக்கு நோ சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம் அனுயா. அதுமட்டுமல்ல, ரூ 30 லட்சம் சம்பளம் என்றால் பேசுங்கள், இல்லாவிட்டால் வேறு ஆளைப் பாருங்கள் என்கிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?" என்றார். |
Monday, 1 August 2011
“செட்” போடவில்லை, “லொக்கேஷன்” முடிவாகவில்லை: ரஜினி தயாரான பிறகே “ராணா” படப்பிடிப்பு.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு ஆரம்பித்த போதுதான் உடல் நலம் குன்றியது. படப்பிடிப்புக்கு வந்த தீபிகாபடுகோனே திரும்பி சென்றார். இப்போது ரஜினி பூரண குணம் அடைந்துள்ளதால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
அக்டோபரில் சூட்டிங்கை தொடங்க உள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட கப்பல் செட், மாட மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாயின.
இதுபற்றி கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ரஜினி முழுக்க தயாரான பிறகே “ராணா” பட வேலைகள் துவங்கும். ராணா படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் கப்பல், மற்றும் மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. அது போன்று அரங்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை. லொக்கேஷன்களும் இன்னும் பார்க்கவில்லை.
இப்போதைக்கு படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பாடல் கம்போசிங் பணிகளில்தான் கவனம் செலுத்துகிறோம். ஏ.ஆர். ரகுமான் ஏற்கனவே பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை துவங்கி விட்டார். படப்பிடிப்பை அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளோம். படப்பிடிப்பை ஆரம்பித்த பிறகு எந்த தங்குதடையும் இல்லாமல் தொடர்ந்து நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராணா படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடம் அக்டோபரில் இருந்து கால்ஷீட் ஒதுக்கி தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தீபிகா படுகோனே எப்போது அழைத்தாலும் ராணா படப்பிடிப்புக்கு வர தயாராக இருக்கிறேன் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளார். சூட்டிங் துவங்கும் முன் ரஜினி திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளார்.
சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன்?டாப்ஸி விளக்கம்.
சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை கே.வி. ஆனந்த் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிக்க டாப்ஸியை அணுகினார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இதுகுறித்து டாப்ஸி கூறியதாவது:-
நிறைய படங்கள் கைவசம் இருப்பதால் மாற்றான் படத்தில் நடிக்க இயலவில்லை. இதை கடைசி படமாக நினைக்கவில்லை. சூர்யா ஜோடியாக நிச்சயம் நடிப்பேன்.
கே.வி. ஆனந்த் சிறந்த இயக்குனர். அவர் டைரக்ஷனிலும் நடிப்பேன். இதுவரை 7 படங்களில் நடித்துள்ளேன். எனது பிறந்த நாட்களில் பெற்றோருடன் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். இரவு விருந்துகளில் பங்கேற்று விட்டு மறுநாள் கஷ்டப்பட்டு விழிப்பது எனக்கு பிடிக்காது.
பிரபுதேவா - நயன்தாரா திருமணம்: மும்பையில் நடத்த முடிவு.
சென்னை அல்லது கேரளாவில் கல்யாணத்தை நடத்தினால் ரசிகர்களும், பத்திரிக்கைக்காரர்களும் 'தொல்லையாக' அமைவார்கள் என்று அஞ்சுவதால் கல்யாணத்தை மும்பைக்கு ஷிப்ட் செய்துள்ளார்களாம்.மும்பைக்கு கல்யாணத்தை மாற்றலாம் என்று முக்கிய நடிகர் ஒருவர்தான் பிரபுதேவாவுக்கு அட்வைஸ் கொடுத்தாராம். அங்கு வைத்தால்தான் இந்த மீடியா தொல்லையைத் தவிர்க்கலாம் என்பது அவரது அறிவுரையாம். மனைவியாக ரமலத் நீடித்து வந்த நிலையில், நயனதாராவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பிரபுதேவா, கடும் கஷ்டப்பட்டு சமீபத்தில்தான் ரமலத்தை விவாகரத்து செய்தார். இதையடுத்து தற்போது நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள படு வேகமாக ஏற்பாடுகளை செய்துவருகிறார். சென்னை, ஹைதராபாத், கொச்சி என பல இடங்களை முதலில் பரிசீலித்தனர். இறுதியில், மும்பை என தற்போது தீர்மானித்துள்ளனர். மிக மிக நெருங்கிய உறவினர்கள், நட்பு வட்டாரத்தை மட்டும் திருமணத்திற்கு அழைக்கப் போகிறார்களாம் இருவரும்.நடிகர் சிம்பு, நடிகை மீனா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுப்பார்களா என்பது தெரியவில்லை! |
எனக்கு எதிரிகள் அரசியலில் இருக்கும் சினிமாக்காரர்கள்தான்:அஜீத் பரபரப்பு பேட்டி.
Sunday, 31 July 2011
பூர்ணாவின் ஸ்ருதி ஆசை!
கோலிவுட்டில் நடக்கும் கோல்மால்கள்!
இறங்கி வந்துள்ள ஸ்ரேயா!