
இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு ஆண்ட்ரியா, டில்லியைச் சேர்ந்த ஒரு பெண் மேக்கப் கலைஞரை அழைத்து வந்தார். இதற்கு தமிழ் மேக்கப்மேன்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சங்க சட்டதிட்டத்தின்படி, இங்குள்ள மேக்கப்மேனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆண்ட்ரியாவிடம் வற்புறுத்தினார்கள். அதற்கு ஆண்ட்ரியா சம்மதிக்காததால், மேக்கப் மேன்கள் அவரை சுற்றிலும் நின்றபடி, முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் சூட்டிங் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த பிரச்னையில் படப்பிடிப்பு குழுவினர் தலையிட்டு, ஆண்ட்ரியாவுக்கும், மேக்கப்மேன்களுக்கும் சமாதானம் செய்து வைத்தார்கள். அதன்பிறகு, சூட்டிங் மீண்டும் தொடங்கியது.