
Monday, June 13, 2011
புராண கால படங்களுக்கு ஒரு காலத்தில் தனி செல்வாக்கே இருந்தது. சிவாஜி நடித்த திருவிளையாடல், கந்தன் கருணை, திருவருட் செல்வர் என அடுக்கிக் கொண்டே போகலாம். காலம் மாறியது காட்சிகளும் மாறின.ஆனால் அந்த புராண கால டிரெண்ட் தற்போது மீண்டிருக்கிறது எனலாம். ஆக்ஷன், முத்தக்காட்சி, நீச்சல் உடை என ஒருபுறம் தனது திறமையை பறை சாற்றிக் கொள்ளும் சினேகா, புராணக் கதைகளில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கில் நாகார்ஜுனாவுடன், ‘பக்த ராமதாஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நன்கு போகவே, மீண்டும் அவருடன் இணைந்து, மற்றொரு தெலுங்கு புராண படத்திலும் நடிக்கிறார். இது போன்ற புராண கதைகளில் நடிப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சினேகாவின் நிலைமை இப்படி இருக்க, புராண படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. ‘ராம ராஜ்ஜியம்’ என்ற தெலுங்கு படத்தில், சீதை வேடத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமானதிலிருந்தே எதிர்ப்பு வர ஆரம்பித்தது.
பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத்தின் வாழ்க்கையில் புகுந்து, அவருக்கு துரோகம் செய்த நயன்தாரா, சீதை வேடத்தில் நடிக்க தகுதியற்றவர் என்று முதலில் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், அப்படத்தை ரிலீஸ் செய்யும் தியேட்டர்களுக்கு முன், போராட்டம் செய்யப் போவதாகவும் ஒரு அரசியல் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.