
இந்நிலையில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் களமிறங்கும் அதே நேரத்தில் தனது மகன் குறளரசனும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க வேண்டும் என்று நடிகரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து மகனுக்காக தானே ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறாராம். இதுபற்றி சமீபத்தில் தம்பி குறரளசன் பிறந்த நாளை கொண்டாடிய அண்ணன் நடிகர் சிம்பு கூறுகையில், குறளரசன் சினிமாவில் நடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பா படத்தில் விரைவில் அவர் அறிமுகமாவார், என்றார்.
ஏற்கனவே வைகைப்புயல் வடிவேலுவின் மகன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி வருவது கூடுதல் தகவல்.