Monday, June 13, 2011
டெல்லி திகார் சிறையில் இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற தென்னிந் திய உணவு வகைகள் வழங்கப்படுகிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தென்னிந்திய பிரபலங்கள் சிலரும், ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் உள்ளனர்.