
இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த கர்நாடக புல்டோசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை ரைனோஸ் அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை டைனோஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. வெண்ணிலா கபடிக்குழு நாயன் விஷ்ணு அதிரடியாக விளையாடி 43பந்துகளில் 85ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினார். இதனையடுத்து கடின இலக்கை விரட்டிய கர்நாடக புல்டோசர்ஸ் அணியினர், சென்னை அணியின் சொதப்பலான பந்துவீச்சால் அதிரடியாக விளையாடினார். இதனால் 16.4ஓவரிலே 181ரன்கள் குவித்து 8விக்கெட் வித்யாசத்தில் கர்நாடக புல்டோசர்ஸ் அபார வெற்றி பெற்றனர். சென்னை அணி தனது கடைசி லீக்கில் மும்பை ஹீரோஸ் அணியை வருகிற 11-ந்தேதி விசாகப்பட்டணத்தில் சந்திக்கிறது. இறுதிப்போட்டி வருகிற 12-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.