இசையமைப்பாளர், பாடகர், இசை வல்லுனர் என இளம் வயதிலேயே பன்முகங்களை கொண்டதால்தான் ரசிகர்களால் "இசை இளவல்" என அன்போடு அழைக்கப்படுகிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். இன்று இவர் தனது 24-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
வசந்த பாலனின் இயக்கத்தில் விருதுகளை வென்ற வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ். அஜித் குமாரின் கிரீடம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குசேலன், அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன், அண்மையில் தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த ஆடுகளம் என இவரது இசையமைப்பின் பட்டியல் நீள்கிறது.
விக்ரம் நடிப்பில் தெய்வத் திருமகன் இவரது இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனது இசை ராசாங்கத்தை நடத்த ஆரம்பித்திருக்கும் இந்த இசை இளவல், ஒரு வகையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உறவினர் ஆவார்.
இன்று தனது 24-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழும் இசை இளவல் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தமிழ்ஸ்டார் இணையதளம் அதன் வாசகர்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Tuesday 14 June 2011
"இசை இளவல்" ஜி.வி. பிரகாஷ் குமாரின் 24-வது பிறந்த நாள.
Tuesday, June 14, 2011