மலையாள படமான நீலத்தாமரா படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கிய அமலாபாலுக்கு, மலையாளத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மலையாளத்தை விட்டு தமிழுக்கு வந்தார். தமிழில் "வீரசேகரன்" படத்தில் அறிமுகமாகி, "சிந்து சமவெளி" படத்தில் மாமனாருடன் சல்லாப காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தி, "மைனா" படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு தமிழில் ஏகப்பட வரவேற்பு. விக்ரமுடன் "தெய்வத்திருமகள்", அதர்வாவுடன் "முப்பொழுதும் உன் கற்பனைகள்", லிங்குசாமியின் "வேட்டை" உள்ளிட்ட அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழில் அமலா பாலுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிரமித்து போன மலையாள திரையுலகம், மீண்டும் அவரை மலையாள படங்களில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ப்ருத்விராஜ் நடிக்கும் படம் ஒன்றில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுதவிர ஏற்கனவே "இது நம்மோட கத" என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனால் தமிழில் மட்டும் பிஸியாக இருந்த அமலா பால், இப்போது மலையாளத்திலும் பிஸியாகவிட்டார்.