Saturday, July 09, 2011
நடிகர் ஜெய் - நடிகை அஞ்சலி ஜோடி நடிக்கும் "எங்கேயும் எப்போதும்" பட சூட்டிங்கில் ஆசிட் வீசப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதில் 7 பேருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசின் சொந்த பட நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் புதிய படம் "எங்கேயும் எப்போதும்". டைரக்டர் சரவணன் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இறுதிக்கட்ட சூட்டிங், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தது. இதில் சுமார் 150 துணை நடிகர் - நடிகைகள் பங்கேற்றனர்.