Wednesday, June 22, 2011
சினிமாவில் வெறும் கவர்ச்சியை மட்டும் காட்டுவது நடிப்பல்ல திறமையையும் காட்ட வேண்டும் என்று கூறுகிறார் ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயாவுக்கு மழை, சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி என்று அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சமீபகாலமாக புதுமுகங்க நடிகைகளின் படையெடுப்பால் தமிழில் ஓரம் கட்டப்பட்டார் ஸ்ரேயா. தற்போது ஜீவாவுடன் ரெளத்திரம் என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்திலும், ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாக ஸ்ரேயா கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டு, முழு உழைப்போடு தான் நடிக்கிறேன். ஆனால் ஹீரோக்களுக்கு இணையாக எந்த ஒரு நடிகையும் பேசப்படுவதில்லை. சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. என்னை பொறுத்தவரை திறமையான இயக்குநர்கள் படத்தில் மட்டும் தான் நடிப்பேன். சினிமாவில் கவர்ச்சியை மட்டுமே காட்டுவது நடிப்பல்ல, கூடவே திறமையும் வேண்டும். அப்போது தான் சாதிக்க முடியும். எனவே அதுபோன்ற கதைகளில் நடிக்க ஆசை. இந்திய படங்களில் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. மாறாக ஆங்கில படம் ஒன்றில் எனக்கு அப்படி ஒரு கேரக்டர் அமைந்துள்ளது. இந்தபடம் நிச்சயமாக எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் படமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.