
அவர் மேலும் கூறுகையில், எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. எனக்கு எல்லாருமே நண்பர்கள்தான். என் நண்பர்கள் எல்லாம் பல கட்சியில் இருக்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். நான் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவன் ஆகிவிட்டால், மற்றவர்கள் வேண்டாதவர்களாக ஆகிவிடுவார்கள். எனக்கு எல்லாருமே நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதால், எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன், என்று கூறியுள்ளார்.