Tuesday, July 12, 2011
புதுச்சேரியை சேர்ந்த கல்கி, இந்தியில் 'தேவ் டி' படத்தில் அறிமுகமானார். அடுத்ததாக 'ஜிந்தகி நா மிலேகி துபாரா' படத்தில் ஹிருத்திக் ரோஷன், கேத்ரினா கைப் ஆகியோருடன் நடித்துள்ளார். அவர் கூறியது: எனது பெற்றோர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். 38 வருடங்களுக்கு முன் புதுச்சேரி வந்தனர். அப்போது தமிழர்களின் கலாசாரம் மீது அவர்களுக்கு காதல் உண்டானது. இங்கேயே தங்கிவிட்டனர். நான் பிறந்தது புதுச்சேரியில்தான். வளர்ந்தது ஊட்டியில். அங்குதான் படித்தேன். மும்பையில் நடிப்பு பய¤ற்சி பெற்றபோது, இந்தி பட வாய்ப்பு கிடைத்தது. 'ஜிந்தகி நா மிலேகி துபாரா' படத்தில் நடிக்கும்போது கேத்ரினா கைபுக்கும் எனக்கும் சண்டை என மும்பை மீடியா செய்தி வெளியிட்டன. அதில் துளியும் உண்மையில்லை. அடுத்த வாரம் படம் வெளியாகிறது. இப்பட ரிலீசை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு கல்கி கூறினார்.