இந்தியில் பிரம்மாண்டமாக தயாராகும் படமொன்றில் நடிக்க குளிர் மிகுதியாக நடு நடுங்க வைக்கும் ஸ்காட்லாந்து போன்ற நாட்டில் தங்கி நடித்து முடித்து, அந்த அனுபவத்தை கொஞ்சமும் மறக்காமல் வேறு படத்தில் கவனத்தை செலுத்தியுள்ளாராம். இயக்குனர் லிங்குசாமியின் "வேட்டை" படத்தில் நடிக்க தூத்துக்குடிக்கு பறந்து வந்த சமீரா, வெளிநாட்டின் குளிர் அனுபவத்தை தாங்கிய மனதோடு இதமான, சுகமளிக்கும் சூட்டை தேடினாராம். வெளிநாட்டில் நடந்த இந்தி படத்தின் படபிடிப்பிற்காக சென்றிருந்தேன். அங்கே கடுங்குளிர். சுளீர்னு தாக்கிய குளிரில் வெடவெடத்து போனேன். நல்ல வேளையாக அங்கே படப்பிடிப்பை முடித்து கொண்டு இங்கே வந்ததும், என் அழகான மேனி விரும்பிய வெப்பத்தில் சுகமான சூட்டை உணர்ந்தேன். என் நட்புக்குரிய நாயகர்கள் ஆர்யா, மாதவன் இருவருடனும் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளாராம் சமீரா. |