Monday 11 July 2011
எங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை:ஆவேசத்தில் ஜெனிலியா.
Monday, July 11, 2011
ஜெனிலியாவும், ஜான்அபிரகாமும், “போர்ஸ்” என்ற இந்தி படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது ஜெனிலியாவுக்கும், ஜான்அபிரகாமுக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் மணக்கோலத்தில் இருப்பதுபோன்ற படமும் இண்டர்நெட்டில் வெளியாகியுள்ளது. ஜெனிலியாவுக்கும் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் ஜான்அபிரகாமை அவர் மணந்து கொள்வது போன்று வந்த இண்டர்நெட் படத்தால் இந்தி, தெலுங்கு திரையுலகினர் அதிர்ச்சியானார்கள்.
திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் இருவருக்கும் நிஜ திருமணம்தான் நடந்தது என பேட்டி அளித்ததால் விஷயம் இன்னும் பரபரப்பானது. ஜெனிலியா திருமண படத்தை பார்த்து ஆவேசப்பட்டார். எங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை.
படத்தில் அதுபோல் காட்சி வருவதால் திருமண கோலத்தில் நடித்தேன் என்றார். படத்தின் தயாரிப்பாளர் விபுல்ஷாவும் திருமணம் நடக்கவில்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டார். படத்தில் ஜான்அபிரகாமுக்கும் ஜெனிலியாவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சி உள்ளது.
புரோகிதரை வைத்து அந்த திருமண காட்சியை எடுத்தோம். அதை உண்மையானது என்று புரோகிதர் தவறாக நினைத்து விட்டார் என்று அவர் கூறினார்.