
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் வடிவேலு ஊரில் இருக்கப்போவதில்லை.

எல்லா கணிப்புகளையும் பொய்யாக்குவது போல மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்டார் வடிவேலு. நான் உள்ளூர்லதான் இருக்கேன் செல்லங்களா என்று கூறுவது போல தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுக்கு போன் அடித்து, அண்ணே... அப்புறம் என்ன விசேஷம் என்கிறாராம் கூலாக!
நீங்க லண்டன் போயிட்டதா... என்று இவர்கள் இழுக்க, அட போங்கண்ணே. இந்தா இருக்கிற பெங்களூருக்குதான் போயிருந்தேன். அதுக்குள்ளே போட்டு தாளிச்சிட்டாங்களா என்றாராம்!
பீர் பாட்டில்ல மோர் ஊற்றி வச்ச மாதிரி பொசுக்குன்னு போயிருச்சே சுவாரஸ்யம்!