Sunday, June 26, 2011
டைரக்டர் செல்வராகவனுக்கும், அவரது காதலி கீதாஞ்சலிக்கும் வரும் 3ம்தேதி திருமணம் நடக்கிறது. காதல் கொண்டேன் படத்தை இயக்கியபோது, அப்படத்தின் நாயகி சோனியா அகர்வாலுடன் காதல் கொண்ட டைரக்டர் செல்வராகவன், பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சோனியா அகர்வால் சினிமாவில் நடிப்பதை செல்வராகவன் விரும்பவில்லை. காதல் கணவரின் விருப்பத்திற்கேற்ப சோனியாவும் சினிமாவையும், சினிமா விழாக்களையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை சென்றது. விவாகரத்திற்கு பிறகு சுதந்திரமாக இருக்கிறேன் என்று கூறி வரும் சோனியா, பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடையணிந்து வந்து வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார்.