Wednesday, June 22, 2011
மராத்தியில் 5 படங்களில் நடித்து வருவதாகச் சொன்னார் தேஜாஸ்ரீ. அவர் கூறியதாவது: தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மராத்தி பட உலகுக்கு வந்தேன். மராத்தியிலும் தென்னிந்திய படங்களின் கதைக்கு இணையாக, பிரமாண்டமான படங்களை உருவாக்குகிறார்கள். மராத்தி தெரியும் என்பதால், நானே டப்பிங் பேசுகிறேன். ‘சம்பா’ என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக, ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இருக்கிறேன். மராத்தி படமாக இருந்தாலும், தெலுங்கு பட சாயலில் காட்சிகளை அமைத்து ஷூட்டிங் நடத்துகிறார்கள். தமிழில் ஒரு பாடலுக்கு ஆட மீண்டும் அழைக்கிறார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை.