Friday, June 10, 2011
ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெற்ற போது, அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, என்ன செய்து கொண்டிருக்கிறார் போன்ற விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது
சிங்கப்பூர் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை கூற மறுத்துவிட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் எவ்வாறு இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ரஜினிகாந்த் பூரண குணமடைந்து விட்டார். அவர் முன்பு போல் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார். இன்னும் சில நாட்களில், டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் சூப்பர் ஸ்டார் உடல்நலம் தேறியுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் லதா ரஜினிகாந்த், நான், என் மனைவி ஐஸ்வர்யா, அவரது தங்கை சவுந்தர்யா, எனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் தங்கியிருக்கிறோம். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை நாங்கள் அனைவரும் நன்கு கவனித்துக் கொள்கிறோம்.
அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு இதே அபார்ட்மென்டில் தங்கி ஓய்வு எடுப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. உடல்நலம் தேறியுள்ள ரஜினி, முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, வேறொரு நாட்டுக்குச் சென்று அங்கு ஓய்வு எடுப்பாரா? அல்லது இதே அபார்ட்மென்டில் தங்க சம்மதிப்பாரா? அல்லது சென்னைக்கு வந்து ஓய்வு எடுப்பாரா என்பது பற்றி முடிவு செய்யவில்லை.
நல்ல ஆரோக்கியத்துடன் கலகலப்பாக இருக்கும் ரஜினி, தனது அறையிலுள்ள டி.வியில், படங்கள் பார்த்து ரசிக்கிறார். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறார். தியானம் செய்கிறார். வாக்கிங் செல்கிறார். மேலும் சில உடற்பயிற்சிகளும் செய்கிறார். பேரன்களுடன் விளையாடுகிறார். ரஜினி தனது ரசிகர்களுக்கு வாய்ஸ் மூலம் பேசினார். அவர் ஏன் வீடியோவில் தோன்றி பேசக்கூடாது என்று கேட்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினி ஆர்வமாக இருக்கிறார். தன் கருத்துகளை அறிக்கை வாயிலாக சொல்லும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. எனவே, விரைவில் சூப்பர் ஸ்டார் நலமுடன் சென்னை திரும்புவார்.
சிங்கப்பூர் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை கூற மறுத்துவிட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் எவ்வாறு இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ரஜினிகாந்த் பூரண குணமடைந்து விட்டார். அவர் முன்பு போல் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார். இன்னும் சில நாட்களில், டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் சூப்பர் ஸ்டார் உடல்நலம் தேறியுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் லதா ரஜினிகாந்த், நான், என் மனைவி ஐஸ்வர்யா, அவரது தங்கை சவுந்தர்யா, எனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் தங்கியிருக்கிறோம். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை நாங்கள் அனைவரும் நன்கு கவனித்துக் கொள்கிறோம்.
அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு இதே அபார்ட்மென்டில் தங்கி ஓய்வு எடுப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. உடல்நலம் தேறியுள்ள ரஜினி, முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, வேறொரு நாட்டுக்குச் சென்று அங்கு ஓய்வு எடுப்பாரா? அல்லது இதே அபார்ட்மென்டில் தங்க சம்மதிப்பாரா? அல்லது சென்னைக்கு வந்து ஓய்வு எடுப்பாரா என்பது பற்றி முடிவு செய்யவில்லை.
நல்ல ஆரோக்கியத்துடன் கலகலப்பாக இருக்கும் ரஜினி, தனது அறையிலுள்ள டி.வியில், படங்கள் பார்த்து ரசிக்கிறார். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறார். தியானம் செய்கிறார். வாக்கிங் செல்கிறார். மேலும் சில உடற்பயிற்சிகளும் செய்கிறார். பேரன்களுடன் விளையாடுகிறார். ரஜினி தனது ரசிகர்களுக்கு வாய்ஸ் மூலம் பேசினார். அவர் ஏன் வீடியோவில் தோன்றி பேசக்கூடாது என்று கேட்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினி ஆர்வமாக இருக்கிறார். தன் கருத்துகளை அறிக்கை வாயிலாக சொல்லும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. எனவே, விரைவில் சூப்பர் ஸ்டார் நலமுடன் சென்னை திரும்புவார்.