அதென்ன "ஒரு மழை நான்கு சாரல்".
சோகம் என்பதையே அறியாத ரெண்டு பேரும், சோகத்தை தவிர வேறெதையும் அறியாத ரெண்டு பேரும் சந்திக்கிறார்கள். நட்பை மட்டுமே உறவாக கொண்ட இந்த நாலு பேரும் தங்கள் லட்சிய போராட்டத்தை ஆரம்பிக்க, இவர்களில் ஒருவருக்கு வருகிறது காதல்.
இந்த காதலால் மொத்த லட்சியமும் மழைக்கால சென்னை மாதிரி ஆகிவிட, முடிவு என்ன என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறாராம் புதுமுக இயக்குனர் ஆனந்த்.
ரவி, சுதர்ஷன், கணா, சதிஷ் ஆகிய நான்கு பேருடனும் "வர்மம்" படத்தில் நாயகியாக நடித்த அனகாவும் நடிக்கிறாராம். இதுவரை ஸ்டண்ட் இயக்குனராக பின்னால் நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்த ஆக்ஷன் பிரகாஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிங்கமுத்துக்கும் சிறப்பான கதாபாத்திரம் ஒன்றை கொடுத்திருக்கிறார் ஆனந்த். |