ஆனால் ஒவ்வொரு நடிகரும் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.வித்தியாசமாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகர்கள் இருக்கிறார்கள். சிலர் யதார்த்தமாக நடிக்கும் பாணியை கையாள்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கென்று தனி திறமையை வெளிப்படுத்துகின்றனர். எந்தவொரு நடிகராக இருந்தாலும் அவருக்கு தனி அடையாளம் முக்கியம். ரசிகர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்க வேண்டும். நடிகரை முதல் இடத்தில் தான் வைத்துப் பார்க்கிறார்கள். அவருக்காக காத்திருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். நல்ல கதை கிடைக்கும் வரை வெறும் விளம்பர படங்களில் கூட நடிக்க தயார். தற்போது "வேட்டை" படத்தில் பொலிசாக நடிக்கிறேன். இதுவரை நான் இந்த வேடத்தில் நடித்ததில்லை. முதன்முறையாக இந்த வேடத்தில் நடிப்பது புது அனுபவம். |