

இந்நிலையில் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் 15.06.2011 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடன் முதல் அமைச்சருடன் பேச முடிவு செய்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இன்னும் ஒன்றரை மாதங்களில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மகிழ்ச்சியடைந்த ஜெயலலிதா, அவர் குணமடைந்தது குறித்து மகிழ்ச்சியைத் பகிர்ந்து கொள்வதாகவும், விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சிங்கப்பூரிலிருந்து நேற்று தொலைபேசியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் முதலில் பேச முடிவு செய்ததது முதல்வருடன்தான் என்று கூறிய ரஜிநி தான் பூரண உடல்நலம் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். ரஜினிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தொலைபேசியில் ரஜினியின் குரலைக் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் முதல்வர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்காக ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அக்கறையுடன் விசாரித்ததற்கு நன்றிகளையும் கூறினார் ரஜினி.
விரைவில் ரஜினி சென்னை திரும்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அவரை வாழ்த்தியபோது, இன்னும் ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புவதாக ரஜினி கூறினார்.
ரஜினியின் மனைவி லதா ரஜினியுடம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.