Friday, July 08, 2011
களஞ்சியம் இயக்கியுள்ள புதிய படமான கருங்காலியில் ஹீரோயின்கள் அஞ்சலி, அஸ்மிதாவின் படுக்கையறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், காட்சிகளை வெட்டாமல், ஏ சான்று கொடுத்து பாராட்டும் தெரிவித்ததாக இயக்குநர் களஞ்சியம் கூறினார்.
பூந்தோட்டம், பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு ஆகிய படங்களை இயக்கிய களஞ்சியம், நடித்து இயக்கியுள்ள புதிய படம் கருங்காலி. இந்த படத்தில் அஞ்சலி, சுனிதா வர்மா, புதுமுகங்கள் சீனு, அஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இளம் தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லக் காரணம் செக்ஸில் திருப்தியற்ற நிலைதான் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது.
படத்தில், அஞ்சலி-சீனு நடித்த ஒரு படுக்கை அறை காட்சியும், அஸ்மிதா-களஞ்சியம் சம்பந்தப்பட்ட இன்னொரு படுக்கை அறை காட்சியும் இடம் பெற்றுள்ளனவாம்.
படம் முடிவடைந்த நிலையில், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், காட்சிகளில் கை வைக்காமல் வசனங்களை மட்டும் 4 இடங்களில் சைலன்ட் ஆக்கிவிட்டு, ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் களஞ்சியம் கூறுகையில், கருங்காலி படம், செக்ஸ்சை அடிப்படையாக கொண்ட கதைதான்.
இன்றைய இளைஞர்களில் 65 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. படத்தின் கதைப்படி, ஒரு இளம் தம்பதிக்கு திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், பிரச்சினை ஆரம்பிக்கிறது. மூன்றாம் மனிதன் அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறான்.
படத்தில் வரும் இரண்டு படுக்கை அறை காட்சிகளையும் நாகரீகமாக, கவித்துவமாக படமாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், இந்த காலகட்டத்துக்கு பொருத்தமான படம் என்று பாராட்டினார்கள்.
படத்தில், தாம்பத்ய உறவு முடிந்ததும் அஸ்மிதா படுக்கையில் இருந்து பிரா அணிவது போல் ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சியைக் கூட தணிக்கை குழுவினர் நீக்கவில்லை.
நடிக்க மறுத்த நாயகிகள்
இந்த படத்தில், கதைக்கு திருப்பமான ஒரு பெண் கதாபாத்திரம் வருகிறது. அதில் நடித்து தரும்படி சினேகா, மீராஜாஸ்மின், பூமிகா, பத்மப்ரியா ஆகியோரிடம் கேட்டேன். நான்கு பேருமே மறுத்து விட்டார்கள். அவர்கள் நடிக்க மறுத்த பாத்திரத்தில், சுனிதா வர்மா நடித்து இருக்கிறார். உழைப்புதான் வெற்றிக்கு வழி என்பதைப் புரிய வைக்கும் படம் இது, என்றார்.