பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமாவிலிருந்து விடைபெற்றார்.
பிரவுதேவா நயன்தாரா காதலுக்கு பிரபு தேவாவின் மனைவி ரமலத், ஆரம்பத் தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம் ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா.
இதனால் நயன்- பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா- ரமலத்துக்கும் விவாகரத்துக் கிடைத்துவிட்டது. விவாகரத்து பெற்ற கையோடு, நயனை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
அதே சமயம் தெலுங்கில் முன்புகமிட் ஆகியிருந்த ஸ்ரீ ராம ராஜ்யம் என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான் சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம்.
மாலை 6 மணிக்கு சூட்டிங் முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியாவிடைபெற்றார்.
அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல் கூறினார்.
திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன், அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.
பின்னர் படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கை கடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு மேக்கப் மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார். அதன் பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து விடைபெற்றார் நயன்தா
Friday 8 July 2011
கண்ணீர் மல்கும் நயன்தாராவின் கடைசிநேர சூட்டிங்.(வீடியோ இணைப்பு)
Friday, July 08, 2011