Friday, July 08, 2011
முதல்வர் ஆவதுதான் என் லட்சியம். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார். ஆந்திராவில் சமீபத்தில் நடித்த சினிமா நிகழ்ச்சியன்றில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அரசியலில் நுழைந்த பிறகு பெரும்பாலும் சினிமா விழாக்களை புறக்கணித்து வந்த சிரஞ்சீவி, அந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வருகிறார் என்ற தகவல் அறிந்து பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அமிதாப், சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். திடீரென அவர் அரசியலில் குதித்ததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். அவர் அரசியலில் நுழைந்தாலும் 150வது படத்தில் நடிக்கவேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.
அவரைத் தொடர்ந்து பேச வந்த நடிகர் சிரஞ்சீவி, எனது 150வது படத்தில் அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் நான் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயார்" என்றார். இந்நிலையில் சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியொன்றில், நான் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். ஆந்திர முதல்வர் ஆகத்தான் விரும்புகிறேன். ஆந்திர மக்களும் நான் முதல்வர் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள், என்று கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார்ன்னாலே இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுவாங்க போல...!