இது குறித்து அவர் கூறியது:
சினிமாவுக்கும் என் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்பா ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபலமாக இருக்கிறார். ஆந்திர மாநிலம் தான் என்னுடைய சொந்த ஊா். இருந்தாலும் சென்னையிலேயே நிரந்தரமாக குடியேறி விட்டோம். ப்ளஸ் டூ படிக்கிறேன். தற்போது இரண்டு படங்களை முடித்து விட்டேன். ”வேள்வி” என்ற படம் மூலம் அறிமுகமானேன். இப்போது "அரும்பு மீசை குறும்பு பார்வை” படத்துக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்துள்ளன. அடுத்து "காதல் அதையும் தாண்டி புனிதமானது” என்ற படத்தில் நடித்துள்ளேன். படப்பிடிப்பு முடித்து விட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்தடுத்த படங்களுக்குத் தயாராகி வருகிறேன். சினிமாவுக்கான அனைத்து பயிற்சிகளையும் கற்றுள்ளேன். கிளாமர் வேடங்கள் இப்போது எனக்குப் பொருந்தாது. நடிக்க வேண்டிய சூழல் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்களின் வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். கிளாமர், நடிகைகளுக்கு தவிர்க்க முடியாத ஒன்று. மேகனா தான் என்னுடைய இயற்பெயர். நடிகை சுஹாசினியின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். அவரைதான் ரோல் மொடலாக நினைக்கிறேன். அதனாலேயே ஹாசினி என்று பெயர் வைத்துக் கொண்டேன் என்றார். |