Friday, July 08, 2011
என் மார்கெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை கேட்டுக் பெறுகிறேன் என்று நடிகை ஷீலா கூறியுள்ளார். தமிழில் அதிக சம்பளம் கேட்பதால்தான் ஷீலாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று வெளியான செய்தியை மறுத்து ஷீலா ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், தெலுங்கு சினிமாக்களில் என் நடிப்புக்கும், மார்க்கெட்டுக்கும் தகுந்த சம்பளம் வாங்குகிறேன். மற்ற தொழில்களைப் போல்தான் சினிமாவிலும் சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. வெற்றி, தோல்விக்கு ஏற்றாற்போல் சம்பளம் மாறுபடும். இது எங்கும் நிகழும் ஒன்றுதான். தெலுங்கில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. தமிழில் வாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் சின்ன பட வாய்ப்புகள் நிறைய வந்தன தவிர்த்து விட்டேன். நான் முதலில் தேர்ந்தெடுத்த படங்கள் சரியாக இல்லாததால்தான் இன்னும் தமிழில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இனி தமிழில் கதைத் தேர்வில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வேன். தெலுங்கில் வெளியான "மேக் அப் மேன் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் இனி வரும் சினிமாக்களில் சம்பளம் உயரும் என்று நினைக்கிறேன், என்று கூறியுள்ளார். விவரமான பொண்ணுதான் ஷீலா!