
அவர் அளித்துள்ள பேட்டியில், வெங்கட் பிரபு இயக்கத்தில் "சரோஜா, பாண்டிராஜ் இயக்கத்தில் "பசங்க இரண்டு படங்களிலும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்தேன். "பசங்க சோபிக்கண்ணு நல்ல வரவேற்பைப் பெற்றதை உணர்ந்திருக்கிறேன். அதன் பின் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் தமிழில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியில் சில படங்களை உடனடியாக முடிக்க வேண்டி இருந்ததால், தமிழில் வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். ஆனால் சிலர் உங்களுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்கள். கேட்கவே சந்தோஷமாக இருந்ததது. இந்தியில் லூஸ் கேருடன் ஒரு படத்தில் மார்டன் உடைகளை அணிந்து கவர்ச்சியாக நடித்தேன். அது பெரிய விமர்சனத்துக்கு உள்ளனாது. கிளாமராக நடிப்பதில் தவறேதும் இல்லை. கேரக்டரின் பலம் அறிந்துதான் கிளாமரில் நடிக்கிறேன். மற்றபடி எதற்காகவும் கிளாமரை நான் ஏற்பதில்லை. "வானம் படம் பார்த்தேன். எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் சேர்ந்துவிட்டது. சூப்பர் படம். சிம்பு, பரத் அனைவரும் அந்தப் படத்தில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இனி தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்த உள்ளேன் என்று கூறியுள்ளார்.