
இதனை இப்போது மறுத்திருக்கிறார் ரமேஷ். நான் எப்பவுமே டி.ராஜேந்தர் மேல மரியாதை வச்சுருக்கிற ஆள். நான் அப்படி அவரை கிண்டலெல்லாம் பண்ண மாட்டேன், என்று கூறும் ரமேஷ், உடல் மண்ணுக்கு; உயிர் டி.ஆர்-க்கு என்று வசனமெல்லாம் பேசி டி.ஆரின் புகழ் பாடியிருக்கிறாராம். படத்தின் டைரக்டர் திருமலை கிஷோர் கூறுகையில், இந்த படத்தில் ஜித்தன் ரமேஷை ராஜேந்தர் ரசிகராக நடிக்க வைக்க நினைச்சதுமே நான் அவரை நேரில் பார்த்து அனுமதி வாங்கிடனும்னு நினைச்சேன். அதுக்காக அவரை பார்க்க போயிருந்தேன். முதல்ல தயங்கினார். வேண்டாம்... இப்படிதான் பல பேர் என்னை ஒரு காமெடியன் மாதிரி சினிமாவில் காட்டுறாங்க என்று வருந்தினார். ஒரு காலத்தில் அவருடைய படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவின் கலெக்ஷன் மையமாகவும் டிரெண்ட் செட்டராவும் இருந்திருக்கு. அவருடைய பாடல்களை கேட்டுதான் சினிமா மீதே எனக்கு ஆர்வம் வந்திச்சு. படிக்கிற காலத்தில் அவருடைய படங்களை பார்க்க பல மணி நேரம் க்யூவில் நின்னுருக்கேன். இதையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொல்லி உங்களை எந்த இடத்திலும் கிண்டல் செய்யுற மாதிரி எடுக்க மாட்டோம்னு சொன்னேன். அதற்கு பிறகு அவர் எங்களை நம்பினார். அதன்பிறகே டி.ஆர். சார் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்தோம், என்றார்.
படத்தின் சூட்டிங் முடிந்ததும் சிம்புவை வரவழைத்து படத்தை போட்டு காட்டியிருக்கிறார் டைரக்டர் திருமலை கிஷோர். ரொம்ப பிரமாதமா இருக்கு என்று சிம்புவும் மனதார பாராட்டினாராம்.