நான் நல்ல நடிகை; அதனால் எனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று நடிகை ரீமாசென் கூறியுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படம் ஆஹா... ஓஹோவென ஓடும் என எதிர்பாத்த ரீமாசென்னுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்த படத்துக்கு பிறகு ரீமாவை எந்த தயாரிப்பாளரும், இயக்குனரும் நினைத்துகூட பார்க்கவில்லை போலிருக்கிறது. தமிழில் வாய்ப்பில்லாததால் மலையாள சினிமா பக்கம் வாய்ப்பு வேட்டையில் இறங்கிய ரீமாவுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்ததால், சட்டென ஒப்புக் கொண்டு டூயட் பாட ஆரம்பித்து விட்டார்.
தற்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக தி கிங் அண்ட் தி கமிஷனர் என்ற படத்தில் நடித்து வரும் ரீமா, இன்னொருபுறம் இந்திப்பட வாய்ப்பு வேட்டைகளிலும் இறங்கியிருக்கிறார். அப்போ... மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வரவே மாட்டீங்களா? என்று ரீமாவிடம் கேட்டால், கோபக்கணல் தெரிக்க பதில் சொல்கிறார். நல்ல நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் என்ன வேலை? தமிழ் சினிமாவை பொறுத்த வரை இனி நானாக யாரிடமும் வாய்ப்பு கேட்பதாக இல்லை; வரும்போது பார்த்துக் கொள்ளலாம், என்று கூறுகிறார் ரீமா. நடிகை ரீமாசென், எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னாரோ தெரியவில்லை; அம்மணியல் பேட்டி தமிழ் சினிமாவில் சிறு புகைச்சலை ஏற்படுத்தியிருப்பது மட்டும் நிஜம்!