தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தை சேர்ந்தவர்கள் சம்பள உயர்வு கேட்டு சூட்டிங்கை புறக்கணிக்க தொடங்கியதால் ஒரு படத்தின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. சினிமா தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சம்பள உயர்வு பிரச்னை காரணமாக ஒரு படத்தின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் பெயர், `பொன்மாலைப்பொழுது. கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். டைரக்டர் ஏ.சி.துரை இயக்குகிறார். இந்த படத்தின் சூட்டிங் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தீர்மானித்துள்ளபடி சம்பள உயர்வு கொடுத்தால்தான் வேலை செய்வோம், என்று சூட்டிங்கில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்று வந்த `பொன்மாலைப்பொழுது படத்தின் சூட்டிங்கை ரத்து செய்து விட்டதாக டைரக்டர் ஏ.சி.துரை கூறியுள்ளார்.