Saturday, June 25, 2011
போஜ்புரி படத்தில் நடிப்பதாக வந்த தகவலில் உண்மை இல்லை என்றார் த்ரிஷா. இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘போஜ்புரி படத்தில் நடிக்க, இதுவரை யாரும் என்னை கேட்கவில்லை. கவுதம் மேனன் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்தை மீண்டும் தொடங்குவார் எனத் தெரிகிறது. தொடங்கினால் நடிப்பேன். தமிழில் அஜீத்துடன் நடித்த ‘மங்காத்தா’ முடிந்து விட்டது. தெலுங்கில் ‘பாடிகார்ட்’ படத்தில் நடித்து வருகிறேன்’ என்றார்.