Friday, June 24, 2011
ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பிறகும் ஐஸ்வர்யாராய் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். குழந்தை பெற்றுக் கொள்வதை இருவரும் தள்ளி வைத்து இருந்ததாக கூறப்பட்டது.
தற்போது ஐஸ்வர்யா ராய் தாய்மை அடைந்துள்ளார் என்றும் நான் தாத்தாவாக போகிறேன் என்றும் அமிதாப்பச்சன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இச்செய்தி வெளியான அரைமணி நேரத்தில் அமிதாப்பச்சன் டுவிட்டரில் 2483 பேர் வாழ்த்து அனுப்பினர்.
ஐஸ்வர்யா ராய்க்கும் வாழ்த்துக்கள் குவிகிறது. இந்தி நடிகர் சல்மான்கானும் வாழ்த்தியுள்ளார். இவர் ஐஸ்வர்யாராயின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சல்மான்கான் நிருபர்களிடம் கூறும் போது, அபிஷேக்பச்சன்- ஐஸ்வர்யாராயை நான் வாழ்த்துகிறேன். அமிதாப்பச்சன் தாத்தாவாகப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
வாழ்த்துகளுக்கு ஐஸ்வர்யாராய் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் தாய்மை அடைந்ததை தொடர்ந்து எனக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. எங்களை வாழ்த்திய அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.