
“முள்ளும் மலரும்” படத்தில் தோன்றிய நாயகன் இளம்வயது ரஜினியை போல ஒருவரை இந்த புது படத்தில் நாயகனாக நடிக்க வைக்க யோசித்துள்ளார். என் படத்தில் வரும் யதார்த்தமான நாயகன் வேடத்திற்கு முள்ளும் மலரும் படத்தில் வரும் ரஜினியை போன்ற ஒருவரை தேடி வருகிறேன். அந்த மினு மினுக்கும் கருப்பு அழகனை தேடுகிறேன்.
விசாகப்பட்டினத்துக்கு பக்கம் படப்பிடிப்பை நடத்த போகிறோம். படத்தின் கதையில் யானைகளின் வாழ்தலும் இடம்பெறும். அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெறிகொண்டு ஊருக்குள் யானைகள் புகுந்து விடுவது பற்றி செய்திகள் இன்று வெளியாகின்றன. இதற்க்கு முக்கியமான காரணம், நாளடைவில் வனப்பகுதி அழிந்து வருவது தான்.
வனத்தின் அருகே கட்டப்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்த முறை வனத்தை அலசும் விவகாரத்தை இப்படத்திற்காக கையில் எடுத்துள்ளேன் என்று இயக்குனர் பிரபு சாலமன் கூறியுள்ளார்.