கடந்த முறை தலைவராக இருந்த பாராதிராஜா மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ். முரளி போட்டியிடுகிறார். சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதேபோன்று எஸ்.பி. ஜனநாதன் போட்டியின்றி பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 4 இணைச் செயலாளர் பதவிக்கு 10 பேரும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேரும் போட்டியிடுகின்றனர். |