
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரனை இன்று(30.06.11) குடும்பநல நீதிமன்றத்தில், நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரனைக்கு பிரபுதேவாவும், ரமலத்தும் ஆஜராக முடியாததற்கான கரணம் தெரிவித்து ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்தவழக்கை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இருவருக்கும் ஜூலை மாதத்திற்குள் விவாகரத்து கிடைத்து விடும் எனத் தெரிகிறது. இதன் பின்னர் தனது இரண்டாவது காதலி நயன்தாராவை, 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.