கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, அங்காடித் தெரு மூலம் அதிர்ஷ்ட நாயகி ஆனவர் நடிகை அஞ்சலி. அங்காடித் தெருவில் அஞ்சலியின் நடிப்பு பல பாராட்டுக்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் அம்மணியின் வீட்டு வாசலை தட்டியது. அதில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறும் அஞ்சலி, கவர்ச்சியான கேரக்டர் கொண்ட கதைகளை நிராகரித்தார். என் உடம்புக்கு கவர்ச்சியெல்லாம் ஒத்து வராது என்று கூறி வந்த அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறாராம்.
கதையுடன் கூடிய கவர்ச்சி காட்ட தனக்கு தயக்கம் இல்லை என்று கூற ஆரம்பித்திருக்கும் அஞ்சலி, கவர்ச்சியாக நடிக்க தான் தயாராக இருந்தாலும் கூட கதையம்சத்துடன் கூடிய படங்களில் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன், அதேபோல வெறும் கவர்ச்சியை மட்டும் நம்பி நடிக்க மாட்டேன்; அதை நம்பி நான் இல்லை என்று கூறுகிறார்.அஞ்சலி தானாக இப்படி பேசவில்லை; பீல்டில் புதிது புதிதாக நுழையம் கவர்ச்சி கதாநாயகிகளால் ஏற்பட்டிருக்கும் போட்டிதான் இப்படி பேச வைத்திருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?