தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரமன் இயக்கும் படம், ‘இளமை நாட்கள்’. படம் பற்றி அவர் கூறியதாவது: டைரக்டர் பூபதி பாண்டியனின் தம்பி அர்ஜுன் பிரபுவுடன் சேர்த்து, 8 இளைஞர்கள் இதில் அறிமுகமாகிறார்கள். 3 இளைஞிகள். இதில், ‘தேநீர் விடுதி’ ரேஷ்மி ஒருவர். மற்றொருவர், எனது ‘ப்ரியமான தோழி’யில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்வேதா. தவிர, இன்னொரு பெண் அறிமுகமாகிறார். மற்றபடி என் படத்தில் தெரிந்த முகங்கள் யாரும் இல்லை. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பால்ராஜ் இசை. நா.முத்துக்குமார், பா.விஜய், தமிழமுதன் பாடல்கள் எழுதியுள்ளனர். இதுவரை சொல்லாத காதலை, இதில் சொல்லியிருக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 21 வருடங்களாகி விட்டது. இதற்குமுன் நான் இயக்கிய படங்களில், ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்யச் சொல்லி பலர் வற்புறுத்துகின்றனர். அதில் உடன்பாடு இல்லை. ஏற்கனவே செய்த விஷயத்தை மறுபடியும் செய்வதில் ஈடுபாடு இருக்காது. புதுப்புது கதையை இயக்கவே விரும்புகிறேன்.