Monday, June 27, 2011
களவாடிய பொழுதுகள் படத்தை முடித்து ஆண்டுகள் பல ஆகியும் ரிலீஸ் செய்யாமல் இருப்பதை நினைத்து, நினைத்து தினமும் வருந்திக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் என்று இதுவரை மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுத்த டைரக்டர் தங்கர் பச்சான், மீண்டும் ஒரு உணர்வுபூர்வமாக ஒரு கதையை எழுதி, இயக்கி இருக்கும் படம் தான் "களவாடிய பொழுதுகள்". பிரபுதேவா, பூமிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தபடம் முடிந்து ஆண்டுகள் பலஆகியும், ரிலீஸ் செய்ய முடியாமல், பெட்டியில் தூங்கி கொண்டு இருக்கிறது.