பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி, ஆடி, ஓடி உழைத்து நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது சென்னை சாலிகிராமம் கோதண்டபாணி ரெக்கார்டிங் ஸ்டூடியோ. எஸ்.பி.பியின் மகன் சரண், ஆரண்யகாண்டம் வரை தயாரித்த ஐந்தாறு படங்களால் ஏற்பட்ட பல கோடி நஷ்டங்களாலும், கடனாலும் இப்போது அந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவை தந்தை எஸ்.பி.பி., விற்பனை செய்வதற்காக விலை பேசி வருகிறாராம். பேசாமல் எஸ்.பி.பி., சரண் அப்பா மாதிரி பாடகராகவும், நடிகராகவே இருந்திருக்கலாம். அதைவிட்டு படத்தயாரிப்பில் இறங்கினால் இப்படித்தான் ஆகும் பாவம்!