திருவோடு ஏந்துற நேரத்துலதான் தேவாரம் படிப்பேன்னு அடம்பிடிக்காமல் மார்க்கெட்டில் இருக்கும் போதே சின்னத்திரையின் மீது ஒரு கண் வைத்திருக்கிறார் கவுதம் மேனன். விரைவில் கவுதமே ஒரு சீரியல் இயக்கும் எண்ணத்திலிருக்கிறாராம். பாலசந்தர் முன்னணி இயக்குனராக இருக்கும் போதே சின்னத்திரையில் சீரியல் ஒன்றை இயக்கி மக்களின் மதி மயக்கியது நினைவிருக்கலாம்.
கவுதம் மேனனின் சின்னத்திரை லட்சியம் அதற்கு சற்றும் குறைவில்லாதது. இந்த சீரியலின் இன்னொரு மினுமினுப்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். முதன்முறையாக அவரையும் சின்னத்திரைக்கு கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது கவுதமுக்கு.ஆரம்பத்தில் நல்லபடியாகவே மூவ் ஆன இந்த விஷயம், தற்போது பிரேக் அடித்து நிற்கிறதாம். காரணம் இசைப்புயல்தான். இன்றைய முன்னணி சீரியல்கள் பலவும் கூட 'சுருட்டல்' ரகம்தான்! ஆனால் தன்னால் அப்படி ஒரு சுருட்டல் இசையை தர முடியாது என்று கருதுகிறாராம். சினிமாவுக்கு செலவு செய்வதை போல சீரியலுக்கும் செலவு செய்தால் அதை மீட்டெடுப்பது எப்படி என்பதிலும் பெரிய சிக்கல் இருக்கிறதாம். இதையெல்லாம் மனதில் கொண்டு சின்னத்திரைக்குள் இறங்கலாம் என்று ரஹ்மான் அட்வைஸ் செய்ய,அடுத்த கட்டத்தை நோக்கி மூச்சு பிடிக்க தவழ்ந்து கொண்டிருக்கிறதாம் சீரியல் முயற்சி!