
இந்த நிகழ்ச்சியில் விஜய்க்கு சிறப்பு ஒன்றும் காத்திருக்கிறதாம். உலக அரங்கம் காவலன் படத்தின் பெருமைகளை பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உள்ளூரில் ஒரே அடிதடியாக இருக்கிறது. இப்படத்தின் பண விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ரொமேஷ் பாபு, தயாரிப்பளார் ஷக்தி சிதம்பரம் மீது போலீசில் புகார் செய்திருப்பது, அதனைத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் குழப்பம் என காவலன் பஞ்சாயத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.