Friday 10 June 2011
நமீதாவை சுற்றி ரசிகர்கள் முற்றுகை
Friday, June 10, 2011
நடிகை நமீதா ஜவுளிக் கடை மற்றும் நகை கடைகள் திறப்பு போன்ற தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அவரைக் காண ரசிகர்கள் திரள்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி காயத்தோடு தப்பினார். போலீசார் அவரை மீட்டனர். இன்னொரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று நமீதாவை வழிமறித்தனர். அவர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டு அனுப்பி வைத்தார்.
தற்போது திருச்சியில் நடந்த ரியல் எஸ்டேட் நிறுவன விழாவில் பங்கேற்க சென்ற போது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். கூட்டத்தினர் நமீதாவை முற்றுகையிட்டு ஆட்டோ கிராப் கேட்டனர்.
விழா ஏற்பாடு செய்தவர்கள் பாதுகாப்பு வளையமிட்டு நமீதாவை அழைத்துச் சென்றனர். ஒரு சிறுமி நமீதாவிடம் கைகுலுக்கினார். அந்த சிறுமிக்கு தனக்கு வழங்கப்பட்ட சால்வையை போர்த்தினார்.