ரூ.5 லட்சம் பணத்தை அட்வான்சாக வாங்கிக் கொண்டு சூட்டிங்கில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மீனுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்வப்னமாலிகா என்ற மலையாளப் படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தேவராஜன் என்பவரிடம் ரூ 5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின். ஆனால் அவர், சொன்னபடி அந்த படத்தின் சூட்டிங்கிற்கு போகவில்லை. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர், கோழிக்கோடு முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீரா ஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை மீரா ஜாஸ்மினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் மீரா ஜாஸ்மின் மேல்முறையீடு செய்தார். தயாரிப்பாளர் தேவராஜன் முதலில் என்னிடம் சொன்ன கதை வேறு; இப்போது படமாக எடுத்து வரும் கதையே வேறு. எனவே எனவே இந்த சம்மனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என்றும் மீரா கேட்டுக் கொண்டார். மீராவின் மனுவை விசாரித்த ஐகோர்ட், அவரது தரப்பு வாதத்தை ஏற்கவில்லை. வரும் 8ம் தேதிக்குள் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.