Friday, July 29, 2011
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் தன் மனைவி மீனா ஓடி விட்டதாக அவரது கணவர் போலீசில் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். துணை நடிகையான மீனாவின் கணவர் பெயர் ராஜா. நாகர்கோவிலை சேர்ந்த அவர் சென்னை விமான நிலைய போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அதில், என்னுடைய மனைவி மீனா (27). துணை நடிகை. அவர் கடந்த 24.4.2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் தங்கியிருந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, கடந்த 23ம்தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.அப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.