தமிழில் அறிமுகமாகியும் பெரிய வாய்ப்பு அமையாததில் வருத்தமா? இந்தக் கேள்விக்கு மேக்னா பதிலளிக்கையில், மலையாளத்தில் நல்ல படங்கள் கிடைத்தன. நட்சத்திர பட வாய்ப்புகளால் மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் வெற்றி. தமிழில் ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நேரத்தில் தான்"உயர்திரு 420" பட வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் சினேகன் நாயகனாக நடிக்கிறார். சமீபத்திய படங்களின் எந்த சாயலும் இல்லாத ஒரு திரைக்கதை. இனி நல்ல நல்ல வாய்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். நான் நயன்தாரா போல் இருப்பதாக நிறைய பேர் சொல்லுகிறார்கள். ஊடகங்களும் என்னை அவருடன் ஒப்பிட்டு பேசுகின்றன. நயன்தாரா இடத்தை நீங்கள் பிடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நயன்தாராவின் நடிப்பு எனக்கு பிடித்தமான ஒன்று தான். ஆனால், எனக்கான இடம் அவருடையது அல்ல. எனக்கென தனி இடம் இருக்கிறது. அதற்கு என்னைத் தயார்ப்படுத்தி வருகிறேன். நயன்தாராவின் திருமணம் குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. அது எனக்கு தேவையில்லாத விடயமும் கூட என்றார். |